கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரியில், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தேசிய மதிப்பீட்டுச் சான்றளிப்புக் குழுவினர் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்தக் குழுவினர் பேராசிரியர்கள்- மாணவர்களின் விகிதாசாரம், கற்றல், கற்பித்தல் முறைகள், மாணவர்களின் கல்வித் தரம், கல்லூரியின் கொள்கை, இலக்கு, வேலை வாய்ப்பு, ஆராய்ச்சிக் கல்வி, தொலை நோக்குத் திட்டம், மாணவர்களின் பின்னூட்டம், கல்லூரி வழங்கும் காப்பீட்டுத் திட்டம், டாக்டர் ஆர்.கே.எஸ்.கல்வி அறக்கட்டளை வழங்கும் மாணவர் உதவித்தொகை, அரசு வழங்கும் உதவித் தொகை துறை சார்ந்த கோப்புகள், என்.சி.சி, என்.எஸ்.எஸ், விளையாட்டு,கலை போன்றவை குறித்து ஆய்வு செய்தனர்.
கல்லூரி கட்டமைப்புகள் மாணவர்களுக்கு அளிக்கும் சலுகைகள், அரசு அறிவிக்கும் பிற சலுகைகள் குறித்தும் ஆய்வு நடத்தினர்.