பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொழுநோய் விழிப்புணர்வு சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியர் விஜய்ஆனந்த் தலைமை வகித்தார். தொழுநோய் அலுவலக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.ராமலிங்கம் பங்கேற்று, தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்துப் பேசினார். பின்னர், தொழுநோய் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நலக் கல்வியாளர்கள் காசிநாதன், ஞானமணி, மேற்பார்வையாளர்கள் பரமசிவம், சீனுவாசன், சுகாதார ஆய்வாளர்கள் லட்சுமிநரசிம்மன், சண்முகலிங்கம், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.