கள்ளக்குறிச்சியில் நாளை பிஎஸ்என்எல் மக்கள் நீதிமன்றம்

கள்ளக்குறிச்சியில் பிஎஸ்என்எல் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (ஆக.19) நடைபெறுகிறது.

கள்ளக்குறிச்சியில் பிஎஸ்என்எல் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (ஆக.19) நடைபெறுகிறது.
 இதுகுறித்து கடலூர் தொலைதொடர்பு மாவட்ட முதன்மைப் பொது மேலாளர் ஆர்.மார்ஷல் ஆன்டனிலியோ வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிஎஸ்என்எல் தொலைபேசி சேவையைப் பயன்படுத்தி கட்டண பாக்கி வைத்துள்ள விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி உள்கோட்டத்துக்கு உள்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கூத்தக்குடி, தியாகதுருகம், வெள்ளிமலை, நாகலூர், நயினார்பாளையம், புக்கிரவாரி, வடக்கநந்தல் பகுதி வாடிக்கையாளர்கள் சமரச அடிப்படையில் நிலுவைக் கட்டணம் செலுத்துவதற்கு ஏதுவாக கள்ளக்குறிச்சியில் வருகிற 19-ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது.
 கள்ளக்குறிச்சி வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் சார்பு-நீதிமன்றத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த நீதிமன்றத்தில், கட்டண பாக்கி வைத்துள்ளவர்கள் கலந்துகொள்ள வேண்டும். எனினும் முன்னரே பணம் செலுத்தியவர்கள் இதில் பங்கேற்க வேண்டியதில்லை.
 பணம் செலுத்தாதவர்கள் மீது நிலுவைத் தொகையை வசூலிக்கும் பொருட்டு வழக்கு தொடரப்படும். எனவே, வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com