புவனகிரியில் 51 மில்லி மீட்டர் மழை பதிவானது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புவனகிரியில் அதிகபட்சமாக 51 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் மற்றப் பகுதிகளில் பதிவான மழையளவு
விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:
அண்ணாமலை நகர் 27.20, சிதம்பரம் 21, லக்கூர் 19, சேத்தியாத்தோப்பு 16, தொழுதூர் 15, லால்பேட்டை 7.50, காட்டுமன்னார்கோவில், கீழச்செருவாய் தலா 4, ஸ்ரீமுஷ்ணம் 3, கடலூர் 2.