அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, கடலூர் மாவட்ட இந்து முன்னணியினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீ.வெங்கடேசன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் அ.வா.சனில்குமார், புதுவை மாநிலச் செயலர் ரமேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.சக்திவேல் நன்றி கூறினார்.
மாவட்டத்தில் புதன்கிழமை போராட்டங்கள் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், காலையில் தமுமுக போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் போராட்டத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.