தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு, சர்வதேச எய்ட்ஸ் தடுப்புச் சங்கம் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாமை நெய்வேலியில் அண்மையில் நடத்தின.
தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்காக நடத்தப்பட்ட இந்த முகாமிற்கு, மாநில ஆலோசகர் வினோத்குமார் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வி வரவேற்றார். இதில், எய்ட்ஸ் தடுப்புச் சங்கப் பயிற்றுநர்கள் அருள்ராஜ், சீமா ஆகியோர் எய்ட்ஸ் நோய் குறித்து எடுத்துரைத்தனர்.
முகாமில், தருமபுரி, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்புப் பகுதி ஒருங்கிணைப்பாளர் தாமரைச்செல்வன் தலைமையிலான குழுவினர் செய்தனர்.