அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், இலக்கிய பீடம் மாத இதழ் சார்பில் கலைமாமணி விக்கிரமன் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
இதில், சிறந்த எழுத்தாளர்களுக்கு "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில், புதுக் கவிதையில் மானுடச் சிந்தனைகள் என்றத் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் கடலூரைச் சேர்ந்த எழுத்தாளர் கடல்நாகராஜன் எழுதிய கட்டுரைத் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து, கடல்நாகராஜனுக்கு பரிசு வழங்கி கெüரவிக்கப்பட்டது. பரிசு பெற்ற எழுத்தாளருக்கு பல்வேறு தமிழ்ச் சங்க நிர்வாகிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.