பண்ருட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில், பெண்ணிடம் 6 பவுன் நகை திருடப்பட்டது.
பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவில் உள்ள கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவையாம்பாளையம் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மல்லிகா(36) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் திருடிச் சென்றார். இதுகுறித்து பண்ருட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.