நடிகர் சிவாஜி கணேசன் சிலையை மாற்றக் கூடாது: ஆட்சியரிடம் மனு

சென்னையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை மாற்றக் கூடாது என, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை மாற்றக் கூடாது என, கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
 கடலூர் மாவட்ட நடிகர் சிவாஜி கணேசன் சமூக நலப் பேரவையின் மாவட்டத் தலைவர் க.தர்மராஜ், பொதுச் செயலர் கே.சிவாஜி கணேசன், பொருளாளர் இ.பிரகாஷ், சட்ட ஆலோசகர் தி.ச.திருமார்பன், துணைத் தலைவர் கே.ஜெயபால் உள்ளிட்டோர் அண்மையில் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
 அந்த மனுவில், சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்டு அவருக்காக கட்டப்பட்டு வரும் மணிமண்டபத்தில் வைக்கப்படும் என, அரசு தெரிவித்துள்ளது. மணிமண்டபத்தில் வேறு சிலையை அமைப்பதோடு, தற்போது உள்ள சிலையை கடற்கரைச் சாலையில் காந்தி, காமராஜர் சிலைகளுக்கு நடுவே மாற்றி அமைக்க வேண்டும். கடலூர் மாவட்ட ஆட்சியர் தமிழக முதல்வருக்கு இந்தக் கோரிக்கையை பரிந்துரை செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com