வெவ்வேறு இடங்களில் இரு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் திருஞானசம்பந்தம் (எ) அப்பு (27). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை மார்ச் 16-ஆம் தேதி ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டாராம்.
இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) வழக்குப் பதிவு செய்து, அப்புவை கைது செய்தனர்.
கோ.ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் மகன் தனராஜ் (எ) அருள் (35). இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதை சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அண்மையில் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டாராம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து அருளை கைது செய்தனர்.