ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்ட நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் பணியாளர்கள் சங்கத்தினர் கடலூரில் உள்ள மண்டல துணைப் பதிவாளர் (வீட்டு வசதி) அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்ட நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் பணியாளர்கள் சங்கத்தினர் கடலூரில் உள்ள மண்டல துணைப் பதிவாளர் (வீட்டு வசதி) அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட தள்ளுபடி திட்டங்களின் மூலம் சங்கங்களுக்கு ஏற்பட்ட இழப்பான ரூ.384 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். 1980-ஆம் ஆண்டு முதல் பணியாற்றும் பணியாளர்களை நிரந்தரப்படுத்தி மறுக்கப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும், கடந்த 5 ஆண்டுகளாக சம்பளமின்றி பணியாற்றும் பணியாளர்களுக்கு உடனடியாக நிலுவை சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com