பண்ருட்டி வட்டம், காடாம்புலியூர் ராஜகுரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 10-ஆம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
இந்தப் பள்ளி சார்பில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றனர். தொடர்ந்து 3-ஆவது முறையாக இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
தேர்வில் வென்ற மாணவர்களுக்கு பள்ளித் தாளாளர் குருநாதன் பரிசு வழங்கி பாராட்டினார். இயக்குநர் சிவபாலகி, முதல்வர் வெண்ணிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.