விழுப்புரம் மாவட்ட இளைஞர், கடலூர் அரசு மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வானம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் சுரேஷ் (25). தையல் தொழிலாளியான இவர், புதன்கிழமை இரவு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மனநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மருத்துவமனை கழிவறை ஜன்னல் கம்பியில் தூக்கிட்ட நிலையில் சுரேஷ் இறந்து கிடந்தார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.