கல்லூரியில் இலக்கிய மன்றம் தொடக்க விழா

நெய்வேலி ஜவஹர் கலை, அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில், ஸ்பெக்டேட்டர் என்ற மாணவர் இலக்கிய மன்றத் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நெய்வேலி ஜவஹர் கலை, அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை சார்பில், ஸ்பெக்டேட்டர் என்ற மாணவர் இலக்கிய மன்றத் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு ஜவஹர் கல்விக் குழுமத்தின் செயலர் ரவிச்சந்திரன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, ஆங்கிலம் பேச எளிய வழி முறைகளைப் பற்றி மாணவர்களிடையே பேசினார்.
 விழாவில், சிறப்பு விருந்தினர்களாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர், புல முதல்வர் திருவள்ளுவன் கலந்துகொண்டு ஆங்கில மொழியின் சிறப்புகள் பற்றியும், ஸ்பெக்டேட்டர் மன்றம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் பேசினார். கல்லூரியின் செயலர் விநாயகமூர்த்தி, என்எல்சி கல்லூரி முதல்வர் வெ.தி.சந்திரசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துறைத் தலைவர் கிப்ட் கிறிஸ்டோபர் துறை நடவடிக்கைகள், ஸ்பெக்டேட்டர் பற்றிப் பேசினார்.
 முன்னதாக, மாணவி சந்தியா வரவேற்றார். பேராசிரியை தீபா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
 துறைப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
 ஸ்பெக்டேட்டர் இலக்கிய மன்றத் தலைவராக முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவி சிவரஞ்சனியும், செயலராக இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவர் அருணும், பொருளராக முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவர் ராஜாராமும் பொறுப்பேற்றுக் கொண்டனர். மாணவி தேவிஸ்ரீ நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com