வடலூர் சத்திய ஞான சபையில் புரட்டாசி மாத ஜோதி தரிசன நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, புரட்டாசி மாத பூச நட்சத்திரத்தையொட்டி வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் 6 திரைகளை நீக்கி 3 முறை அருள்பெருஞ்ஜோதி தரிசனம் காட்டப்பட உள்ளது.