செம்மை நெல் சாகுபடி:  நபார்டு வங்கி அதிகாரி ஆய்வு

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் செம்மை நெல் சாகுபடி குறித்து நபார்டு வங்கியின் கடலூர் மாவட்ட உதவிப் பொது மேலாளர் சங்கர் துரைசாமி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் செம்மை நெல் சாகுபடி குறித்து நபார்டு வங்கியின் கடலூர் மாவட்ட உதவிப் பொது மேலாளர் சங்கர் துரைசாமி வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
 இந்தப் ஒன்றியத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் சம்பா நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.
 இதில், குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற உறுப்பினர்கள் செம்மை நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்த வயல்களை நபார்டு வங்கியின் கடலூர் மாவட்ட உதவிப் பொது மேலாளர் சங்கர் துரைசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இயற்கை உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார்.
 உழவர் மன்றத் தலைவர்கள் குறிஞ்சிப்பாடி ஆர்.கே.ராமலிங்கம், வரதராஜன்பேட்டை தேவராஜன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com