தேசிய அளவிலான வலைபந்து போட்டியில் பங்கேற்க சிதம்பரம் மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் சார்பில் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்ற வலைப்பந்து தகுதித் தேர்வு போட்டியில் மகளிருக்கான 14 வயதுக்குள்பட்டோர் பிரிவில் மாநிலம் முழுவதும் இருந்து 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களில் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மானசா தேர்வு செய்யப்பட்டார்.
இதன்மூலம் இவர் தேசிய அளவில் தெலங்கானாவில் நடைபெற உள்ள வலைபந்து போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார்.
போட்டியில் வென்ற மாணவி மற்றும் பயிற்சி அளித்த உடல்கல்வி ஆசிரியர்கள் பிரபாகரன், விக்னேஷ், உமா, தரணி ஆகியோரை வியாழக்கிழமை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் வீனஸ் எஸ்.குமார், முதல்வர் ரூபியாள்ராணி, கல்வி அதிகாரி ஜி.மகேஷ்சுந்தர் ஆகியோர் பாராட்டினர் .