என்எல்சி பள்ளியில் உலக ஓசோன் தினம்

நெய்வேலி, மந்தாரக்குப்பம் என்எல்சி மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப் படை சார்பில், உலக ஓசோன் தினம் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நெய்வேலி, மந்தாரக்குப்பம் என்எல்சி மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமைப் படை சார்பில், உலக ஓசோன் தினம் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
 நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.ஏ.ஜேக்கப் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் பாண்டியன், செல்வராஜ், அரிமா சங்க மாவட்டத் தலைவர் லட்சுமிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெய்வேலி தொழில் வர்த்தக சங்கச் செயலர் ஆர்.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஓசோன் மண்டலம் குறித்து சிறப்புரையாற்றி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.
 நிகழ்ச்சியில், ஓபிஆர் கல்வி நிறுவன பயிற்று ஆசிரியர்கள், என்எஸ்எஸ் திட்ட அலுவலர் சீத்தாராமன், சாரண செயலர் சேகர் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
 பசுமைப்படை வெங்கடேசன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com