கிராம ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு வருவாய்க் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வருவாய்க் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 வருவாய் கிராம ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டச் செயலர் வி.தயாளன் தலைமை வகித்தார். வட்ட துணைத் தலைவர் பி.சத்தியமூர்த்தி விளக்கவுரை ஆற்றினார். ஜி.ஜோதி நன்றி கூறினார்.
 ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com