குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த எஸ்.ஏ.கோதண்டபாணி (80) வியாழக்கிழமை காலமானார். இவரது உடல் மற்றும் கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டது. உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கண்கள் சென்னை சங்கரநேந்திராலயா கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினர் அருண்குமார் ஆகியோர் செய்தனர்.