தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் 

பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் சார்பில், தமிழ் புத்தாண்டு சித்திரை விழா பண்ருட்டியில் உள்ள சாரதா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. 

பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் சார்பில், தமிழ் புத்தாண்டு சித்திரை விழா பண்ருட்டியில் உள்ள சாரதா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
 சங்கத்தின் கெüரவத் தலைவர் ப.ச.வைரக்கண்ணு தலைமை வகித்தார். செந்தமிழ் இசைமாமணி கொ.கோதண்டபாணி இறை வணக்கப் பாடல் பாடினார். செய்தித் தொடர்பாளர் கவிதை கணேசன் வரவேற்றார். "தமிழ்க் காவிரியே வருக' என்ற தலைப்பில், கவிஞர் நாகராசன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் மகாவிஷ்ணு, ஆறுமுகம், கிருஷ்ணமூர்த்தி, அழகைதாஸ், கவிதை கணேசன், ராஜ்குமார், வைத்தியநாதன், கிருஷ்ணன் ஆகியோர் கவிதை பாடினர்.
 காப்பாளர் ரா.சஞ்சீவிராயர், தலைவர் சுந்தர.பழனியப்பன், செயலர் சொ.முத்துக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்வில் தமிழக அரசின் "தமிழ்ச் செம்மல் விருது' பெற்ற கடலூர் பேராசிரியர் ராச.குழந்தைவேலனார், திட்டக்குடி பிறவிக் கவிஞர் ராமசாமி ஆகியோர் கெüரவிக்கப்பட்டனர்.
 விழாவில் சு.சதீஷ்குமாருக்கு விஸ்வேஸ்வரய்யா விருதும், ஆசை.தாமஸýக்கு சமூகப் பணிக்கான விருதும், சமையல் கலைஞர் ராஜாவுக்கு நளபாக சக்கரவர்த்தி விருதும், நெல்லிக்குப்பம் மூர்த்திக்கு தீயணைப்புத் துறையில் முதல் பெண் அதிகாரியான பிரியா ரவிச்சந்திரன் விருதும் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com