ஓய்வு பெற்ற காவலர் மாயம்

ஓய்வு பெற்ற காவலர் மாயமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


ஓய்வு பெற்ற காவலர் மாயமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (74). காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தீவிர ஆஞ்சநேய பக்தரான இவர் தனது வீட்டின் அருகே ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டியுள்ளார். மேலும், ஆண்டுக்கு இரு முறை காசி, அயோத்தி உள்ளிட்ட புனித தலங்களுக்கு யாத்திரை சென்று வருவது வழக்கமாம்.
இதன்படி, கடந்த 9-8-2017 அன்று காசிக்கு புறப்பட்டு சென்றவர் 6 மாதங்களாகியும் வீடு திரும்பவில்லையாம். வழக்கமாக 3 மாதங்களில் வீடு திரும்பும் நிலையில், தற்போது அதிக நாள்களானதால் இவரின் குடும்பத்தினர் காசி, அயோத்தி, கங்கை பகுதிகளுக்கு சென்று தேடியும் அவரை காணவில்லையாம்.
எனவே, அங்குள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ள நிலையில், சனிக்கிழமை தேவனாம்பட்டினம் காவல்நிலையத்திலும் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com