விபத்தில் இளைஞர் சாவு

பண்ருட்டி அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். பண்ருட்டி அருகே உள்ள சின்னப்பேட்டை கிராமத்தைச்

பண்ருட்டி அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
பண்ருட்டி அருகே உள்ள சின்னப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த அசோகன் (56) மகன் லோகநாதன் (24). பண்ருட்டியில் உள்ள கடையில் பணியாற்றி வந்தார். இவர் வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து வழக்கம்போல் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். பணப்பாக்கம், எம்ஜிஆர் நகர் அருகே சென்றபோது எதிரே கரும்பு ஏற்றி வந்த டிராக்டரும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி லோகநாதன் உயிரிழந்தார்.
விபத்து குறித்து புதுப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com