சிதம்பரம் அருகே சிவபுரி அரசு உயர்நிலைப் பள்ளியில், யாச் பொறுப்பாட்சி நிறுவனம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் குமரவேல் தலைமை வகித்தார். யாச் பொறுப்பாட்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் துளசிராஜ் வரவேற்றார். அண்ணாமலைநகர் காவல் நிலைய ஆய்வாளர் கே.அம்பேத்கர் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கருத்துரையாற்றினார். நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.