கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சுத்த சன்மார்க்க நிலையம், ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் பணியாளர்கள், ஏழை மாணவிகள் இல்லத்தினர் சார்பில் ரூ.1.74 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருள்கள் சேகரித்து வழங்கப்பட்டன.
வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நிவாரணப் பொருள்களை ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ரா.செல்வராஜ் வழங்க, வடலூர் மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.திருமுருகன் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.