ஆருத்ரா தரிசன விழாவில் அன்னதானம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில்,

சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில், கடலூர் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கிழக்கு கோபுர வாயிலில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 அன்னதான நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் ஏ.யாகமூர்த்தி தொடக்கி வைத்தார். மாவட்டச் செயலர் பி.சுவாமிநாதன், நிர்வாகிகள் வி.சங்கர், கே.கணேசன், என்.ராஜா, சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்றச் சங்கம் சார்பில், அதன் மாநிலத் தலைவர் ஜி.சேகர் தலைமையில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 பாதுகாப்பு ஏற்பாடு: சிதம்பரம் ஏஎஸ்பி என்.எஸ்.நிஷா தலைமையில் காவல் ஆய்வாளர்கள் குமார், அம்பேத்கர், விஜயகுமார் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை ஆணையர் (பொறுப்பு) கே.ஜெகதீசன் செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com