கேப்பர் மலையில் புதிதாக மின் கோபுரப் பாதை அமைக்கப்பட்டது.
கடலூர் அருகிலுள்ள கேப்பர் மலையில் 230 கி.வோ. தானியங்கி துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
தற்போது விழுப்புரம், உளுந்தூர்பேட்டை துணை மின் நிலையங்களை கேப்பர்மலையுடன் இணைக்கும் வகையில்
ரூ. 35 கோடியில் 34 கி.மீ. தொலைவுக்கு புதிதாக மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்தப் பணிகள் முடிவுற்ற நிலையில், வெள்ளிக்கிழமை மூன்று துணை மின் நிலையங்களும் இணைக்கப்பட்டன.