கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர் நாள் கூட்டம், சுயதொழில் முனைவோருக்கான கருத்தரங்கு ஆகியவை மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், பெறப்பட்ட 18 மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள், பல்வேறு துறைகளின் மூலமாக கிடைக்கும் பலன்கள் குறித்தும் ஆட்சியர் விளக்கினார்.
மேலும், பல்வேறு துறை அலுவலர்கள் தங்களது துறை மூலம் வழங்கப்படும் பயிற்சி மற்றும் சலுகைகள் குறித்து விளக்கினர். கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆண்ட்ரூ அய்யாசாமி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் க.தெய்வசிகாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.