கடலூர் மாவட்ட மீனவர்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 26 ) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்ட மீனவர்களுக்கான குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும் என மீனவ பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, வருகிற 26-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
எனவே கடலூர் மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து மீனவ கிராம பிரதிநிதிகளும், மீனவ மக்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், புதிய மீன்வளத் திட்டங்கள், சலுகைகள் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் அதில்
தெரிவித்துள்ளார்.