அண்ணாமலைப் பல்கலை. வளாகத்தில் விலையில்லா இணையதள வசதிக்கு ஒப்பந்தம் 

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களில் முதன் முறையாக, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் விலையில்லா இணைய வசதி மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களில் முதன் முறையாக, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் விலையில்லா இணைய வசதி மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானது.
 பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் சிதம்பரம் ஜியோ மேலாளர் ஆர்.தியாகராஜன், பல்கலைக்கழகப் பதிவாளர் கே.ஆறுமுகம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
 இந்த ஒப்பந்தப்படி, பல்கலைக்கழகத்தின் கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை, பறங்கிப்பேட்டையில் உள்ள கடல் அறிவியல் புலம் உள்ளிட்ட 10 புலங்கள், அனைத்து அலுவலகங்களுக்கும் விலையில்லா இணைய வசதி ஏற்படுத்தப் படும்.
 இந்த வசதியானது பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பேருதவியாக அமையும் என்றார் துணைவேந்தர் செ.மணியன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com