இளைஞர் மர்மச் சாவு

நெல்லிக்குப்பம் அருகே மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

நெல்லிக்குப்பம் அருகே மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
 நெல்லிக்குப்பம் அருகே உள்ள வாழப்பட்டில் இளைஞர் ஒருவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்ததை அந்தப் பகுதியினர் செவ்வாய்க்கிழமை பார்த்தனர். தகவலறிந்த நெல்லிக்குப்பம் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸார் இளைஞரின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 தூக்கில் தொங்கிய இளைஞரின் கழுத்தில் துண்டு, முழுக்கால் டிராயர் ஆகியவை கட்டப்பட்டிருந்தன. மேலும், அவர் அரை நிர்வாணத்துடன், தரையில் அமர்ந்த நிலையில் காணப்பட்டார்.
 எனவே, அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் எனத் தெரியவில்லை. எனவே, அதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com