மழைநீர் வடிகால் கோரி மனு

கடலூர் அருகே உள்ள பாதிரிக்குப்பம் ஊராட்சி, கூட்டுறவு நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கடலூர் மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை சந்தித்து

கடலூர் அருகே உள்ள பாதிரிக்குப்பம் ஊராட்சி, கூட்டுறவு நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் கடலூர் மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை சந்தித்து அளித்த மனு: எங்களது பகுதியில் சேகரமாகும் மழை நீர் நகரிலுள்ள கட்டபொம்மன் சாலையில் வடிய வைக்கப்பட்டு தேங்கி வருகிறது. ஆனால், இங்கிருந்து தண்ணீரை வெளியேற்ற வழியில்லாததால் நீண்ட நாள்களாக தேங்கி நிற்கிறது. இதனால், சுகாதாரக்கேடு, போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
 எனவே, கட்டபொம்மன் சாலையுடன் இணைக்கும் மற்ற 7 நகர்களின் சந்திப்புச் சாலையில் சிறிய அளவிலான பாலம் கட்டி மழைநீர் வடிகால் அமைத்துத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com