கடலூர் மாவட்டத்திலிருந்து பிளஸ்2 தேர்வு எழுதிய பார்வையற்ற 12 பேரும் தேர்ச்சி பெற்றனர்.
பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் தமிழகம் முழுவதும் புதன்கிழமை வெளியானது. இதில் கடலூர் மாவட்டம் தேர்ச்சி அடிப்படையில் 28-ஆவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்த நிலையில் மாவட்டத்திலிருந்து தேர்வு எழுதிய 12 பார்வையற்ற மாணவ, மாணவிகளும் தேர்வாகி 100 சதவீத வெற்றியைப் பதிவு செய்தனர்.
வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளிகள் 26 பேர் தேர்வு எழுதியதில் 12 பேர் தேர்ச்சி பெற்றனர். உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் 40 பேர் தேர்வு எழுதியதில் 34 பேரும், மற்ற வகையிலான மாற்றுத் திறனாளிகள் 33 பேர் தேர்வு எழுதியதில் 22 பேரும் தேர்ச்சி பெற்றனர். மொத்தமாக 111 மாற்றுத் திறனாளிகள் தேர்வு எழுதியதில் 80 பேர் தேர்ச்சிப்பெற்று 77.05 சதவீதத் தேர்ச்சியை பதிவு செய்தனர்.
மேலும், கடலூர் மத்திய சிறையிலிருந்து சென்னை புழல் சிறைக்குச் சென்று தேர்வு எழுதிய 3 பேரும் தேர்ச்சிபெற்றனர்.