திட்டக்குடியில் அமைந்துள்ள வைத்தியநாதசுவாமி கோயில் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை விருத்தாசலம் சார்-ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், பெருமுலை கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்துக்குச் சென்றவர் அங்குள்ள வசதிகள், வீடுகளின் நிலை குறித்து ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர், பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாயம் செய்ததாக கண்டறியப்பட்ட பீமனேரி பகுதியைப் பார்வையிட்டார்.
அப்போது வட்டாட்சியர் ப.சத்யன், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.