மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் 64-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பால், ரொட்டி உள்ளிட்ட பொருள்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வுக்கு கட்சியின் பண்ருட்டி தொகுதி பொறுப்பாளர் ஆர்.எஸ்.முத்து தலைமை வகித்தார். எம்.தணிகைநாதன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட தொகுதி பொறுப்பாளர்கள் கடலூர் சண்முகம், பண்ருட்டி பரணி, அருள்பிரகாஷ் ஆகியோர் நோயாளிகளுக்கு பால், ரொட்டிகளை வழங்கினர். கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சுப்பிரமணியன், ஜாபர்ஸன், நத்து, சிவா, துரை, பைசல், குமார், பாண்டு, ராமலிங்கம், ராம்பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.