தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தத் திட்டத்தின் கீழ் அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் துப்புரவுப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
ஆட்சியரக வளாகத்தில் வளர்ந்திருந்த தேவையற்ற செடிகள், குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆனந்தன் மற்றும் ஆட்சியரக ஊழியர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டனர்.