காட்டுமன்னார்கோவில் நாட்டார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த எம்.சிவக்கொழுந்து (91) புதன்கிழமை காலமானார். இவரது உடல், கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம், காட்டுமன்னார்கோவில் அரிமா சங்கம் சார்பில் தானமாகப் பெறப்பட்டது. உடல் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினர் சேக்கிழார், காட்டுமன்னார்கோவில் அரிமா சங்கம், ரோட்டரி சங்க நிர்வாகிகள் செய்தனர்.