கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை ஓய்வுபெற்ற அலுவலர்களின் சங்கப் பொதுக்குழு கூட்டம், சங்கத்தின் தலைவர் ஆர்.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், சங்கச் செயலர் ஜி.ஆதவன் சென்ற மாத கூட்ட அறிக்கையை வாசித்தார். பொருளாளர் ஆர்.நடராஜன் வரவு-செலவு அறிக்கை வாசித்தார். துணைத் தலைவர் ஆர்.முத்துகிருஷ்ணன், இணைச் செயலாளர் ஆர்.தனுசு ஆகியோர் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர்.
ஏ.புருசோத்தமன், ஆர்.ராமலிங்கம், திலீப்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய்ஆகியோரது மறைவுக்கும், கேரள மாநிலத்தில் வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிர்வாகி பத்மநாபன் நன்றி கூறினார்.