மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்கள் தேர்வு

கடலூர் மாவட்ட கூடைப்பந்துக் கழகம் சார்பில் 13 வயதுக்கு உள்பட்டோருக்கான மாவட்ட கூடைப் பந்து அணிக்கு சிறுவர், சிறுமிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கடலூர் மாவட்ட கூடைப்பந்துக் கழகம் சார்பில் 13 வயதுக்கு உள்பட்டோருக்கான மாவட்ட கூடைப் பந்து அணிக்கு சிறுவர், சிறுமிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 இந்தத் தேர்வுப் போட்டிகள் வருகிற 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு கடலூரில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
 இந்த தேர்வில் 2005-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பின்னர் பிறந்தவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
 பங்கேற்கும் வீரர்கள் பிறப்புச் சான்றிதழ் நகலுடன் நேரில் பங்கேற்கலாம் என்று கடலூர் மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் மாவட்டத் தலைவர் பி.எம்.ஜெ.இளங்கோவன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com