புதுவை மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி சார்பில் தாய்ப்பால் வார நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கடந்த 1-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டது. அதன் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி தலைவர் எம்.தனசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலாளர் கே.நாராயணசாமி முன்னிலை வகித்தனர்.
தேசிய சிசு பராமரிப்புத் துறைத் தலைவர் ஜே.குமுதா சிறப்புரை ஆற்றி போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் வெற்றிக்கொடி, டீன்கள் ஆர்.என்.காக்னே, கார்த்திகேயன், குழந்தைகள் நலத்துறைத் தலைவர் அருள்குமரன், பேராசிரியர் சிங்காரவேலு, இணைப் பேராசிரியர் பரத்குமார், செவிலியர் கல்லூரி முதல்வர் தனசு, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தேசிய சிசு பராமரிப்பு துறைத் தலைவர் குமுதா தாய்ப் பாலூட்டும் வழிமுறைகள், தாய்ப்பால் சேகரிப்பு வங்கி குறித்து விளக்கினார்.