புதுச்சேரியில் பல் மருத்துவப் பாடப் பிரிவில் சேர ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
பல் மருத்துவப் பாடப் பிரிவில் சேர்வதற்கான சென்டாக் கலந்தாய்வு அண்மையில் முடிவடைந்தது. இந்த நிலையில், இடங்கள் ஒதுக்கப்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரிகளில் சேர வேண்டும். எனினும், சில கல்லூரிகளின் வேண்டுகோளின்படி, வருகிற 17-ஆம் தேதி மாலை 4 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுட் தெரிவித்தார்.