அம்பேத்கர் நினைவு தினம்: அரசு சார்பில் மரியாதை

அம்பேத்கரின் 61-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவருக்கு அரசு சார்பில் புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

அம்பேத்கரின் 61-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவருக்கு அரசு சார்பில் புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
 புதுச்சேரி சட்டப்பேரவை அருகே உள்ள அம்பேத்கரின் சிலைக்கு முதல்வர் வே.நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 சட்டப்பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம், அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், மு.கந்தசாமி, இரா.கமலக்கண்ணன், பேரவை துணைத் தலைவர் வி.பி. சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, விஜயவேனி, புதுவை அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், முன்னாள் அமைச்சர் ஏழுமலை, முன்னாள்
 எம்.எல்.ஏ, நீல.கங்காதரன் மற்றும் பலர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எதிர்க்கட்சித் தலைவரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி தலைமையில் அந்தக் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர்கள் தியாகராஜன், ராஜவேலு, பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜெ.ஜெயபால், டிபிஆர் செல்வம், சுகுமாறன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com