இந்திய குடியரசு துணைத் தலைவரும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வேந்தருமான வெங்கய்ய நாயுடுவை, பல்கலை. துணைவேந்தர் குர்மீத் சிங் சந்தித்துப் பேசினார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 7-வது துணைவேந்தராக புதுதில்லி பல்கலைக்கழக வேதியியல் துறைப் பேராசிரியரும், விஞ்ஞானியுமான குர்மீத் சிங் அண்மையில் நியமிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து, நவ.29-ஆம் தேதி துணைவேந்தர் பொறுப்பை ஏற்றார்.
இந்த நிலையில், புதுதில்லிக்குச் சென்ற துணைவேந்தர் குர்மீத் சிங், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். அப்போது, புதிய துணைவேந்தருக்கு வெங்கய்ய நாயுடு வாழ்த்து தெரிவித்தார்.