கடல் அலையில் சிக்கி மாயமான இளைஞரின் சடலம் கரை ஒதுங்கியது

புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கி மாயமான மற்றொரு இளைஞரின் சடலமும் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.

புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கி மாயமான மற்றொரு இளைஞரின் சடலமும் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.
 ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முத்து (23). அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளி அல்தாப் (22). இவர்கள் இருவரும், நண்பர்கள் 5 பேருடன் புதுச்சேரி செவ்வாய்க்கிழமை சுற்றுலா வந்தனர்.
 பல்வேறு இடங்களைச் சுற்றி பார்த்த இவர்கள் பழைய துறைமுகம் அருகே கடலில் இறங்கிக் குளித்துள்ளனர். அப்போது அல்தாபும், முத்துவும் ஆழப் பகுதிக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக எழுந்த ராட்சத அலை இருவரையும் இழுத்துச் சென்றது.
 இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடலோரக் காவல் படையினரின் உதவியுடன் இளைஞர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
 இதனிடையே, புதன்கிழû காலை அல்தாபின் சடலம் துறைமுகம் அருகே கரை ஒதுங்கியது. முத்துவை போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை அரியாங்குப்பம் முகத்துவாரம் கடலில் சடலம் ஒன்று மிதந்து வருவதை மீனவர்கள் கண்டனர். இதுகுறித்து அவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஒதியஞ்சாலை போலீஸார் படகுடன் சென்று ஒரு மணி நேரம் போராடி முத்துவின் சடலத்தை மீட்டனர். முத்துவின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com