புதுவை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகள்

புதுச்சேரி அரசுச் செயலர் பி.ஆர்.பாபு ஐஏஎஸ் மத்திய பல்கலைக்கழக பதிவாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து, அவர் வகித்து வந்த பல்வேறு துறைகள் வேறு அதிகாரிகளிடம் பகிர்ந்தளிக்கப்பட்டன.

புதுச்சேரி அரசுச் செயலர் பி.ஆர்.பாபு ஐஏஎஸ் மத்திய பல்கலைக்கழக பதிவாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து, அவர் வகித்து வந்த பல்வேறு துறைகள் வேறு அதிகாரிகளிடம் பகிர்ந்தளிக்கப்பட்டன.
 சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த பாபு புதுவை பல்கலைக்கழக பதிவாளராக மத்திய அரசால் அண்மையில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் வகித்து வந்த சுகாதாரத் துறை செயலர் பொறுப்பு, வளர்ச்சி ஆணையர் ஜி.நரேந்திரகுமாரிடம் கூடுதல் பொறுப்பாக தரப்பட்டுள்ளது.
 அதேபோல அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை பொதுப்பணித் துறைச் செயலாளர் மிஹிர்வரதன் வசமும், சுற்றுலா மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை கலை பண்பாட்டுத் துறைச் செயலாளர் பார்த்திபன் வசமும் கூடுதல் பொறுப்பாக தரப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா பிறப்பித்தார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com