புதுச்சேரியில் வருங்கால வைப்பு நிதி ஆணையம் சார்பில் தொழிலதிபர்கள், தொழிலாளர்களுக்கான வசதிகள் குறித்த கருத்தரங்கம் திங்கள்கிழமை (ஜூலை 16) மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை நடைபெறுகிறது.
இதுதொடர்பாக வைப்பு நிதி ஆணையர் கி.மஞ்சுநாத் வெளியிட்ட அறிக்கை: வருங்கால வைப்பு நிதி அலுவலகம், தொழிலதிபர்கள் கூட்டமைப்பு சார்பில், மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை இந்தியன் வங்கி அருகே திங்கள்கிழமை (ஜூலை 16) காலை 11 மணிக்கு கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இதில், வைப்பு நிதி மண்டல ஆணையர் பங்கேற்று பல்வேறு முக்கிய தகவல்கள், அம்சங்கள் குறித்து விளக்கமளிக்கிறார். தொழிலதிபர்கள் கூட்டமைப்புத் தலைவர் திருமால் சிறப்புரையாற்றுகிறார். அனைத்து தொழிலதிபர்கள், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.