புதுச்சேரி அரசு தகவல் தொழில்நுட்பத் துறை, ஐசிடி அகாதெமி சார்பில் நடைபெற்ற போட்டியில் வென்று சிங்கப்பூர் சென்று வந்துள்ளார் புதுவை மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவி.
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற யூத்டாக் போட்டியில் மணக்குள விநாயகர் கல்லூரி கணினி பொறியியல் மாணவி எம்.சாருமதி முதலிடம் பெற்று சிங்கப்பூர் செல்ல தேர்வு பெற்றார்.
நாடு முழுவதும் எட்டு பிராந்தியங்களில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர்கள் ஓரே குழுவாக 4 நாள்கள் சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகங்கள், பன்னாட்டு கல்வி நிலையங்களை பார்வையிட்டு திரும்பினர்.
சிங்கப்பூர் சென்று திரும்பிய மாணவி சாருமதியை கல்லூரித் தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலர் கே.நாராயணசாமி, முதல்வர் வெங்கடாசலபதி கணினி பொறியியல் துறைத் தலைவர் கே.பிரேம் குமார் ஆகியோர் பாராட்டினர்