பாகூர் அருகே மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்தனர்.
பாகூர் புதுநகரைச் சேர்ந்தவர் அருண்குமார் ( 21). கல்லூரி மாணவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அருண்குமாரும், அந்த மாணவியும் வீட்டை விட்டு வெளியேறி, கிருமாம்பாக்கம் நரம்பை பகுதியில் ஒரு வீட்டில் தங்கி வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், தவளக்குப்பத்தில் உள்ள பள்ளிக்கு செல்வதாகக் கூறிச் சென்று, வீடு திரும்பாத அந்த மாணவியின் பெற்றோர், தங்களது மகளைக் காணவில்லை என போலீஸில் புகார் அளித்தனர்.
அதன்படி, தவளக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த மாணவியை அருண்குமார் கடத்திச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் நரம்பை கிராமத்தில் இருந்த இருவரையும் மீட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். மாணவி பெற்றோருடன் செல்ல மறுத்ததால் ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். அதேசமயம் மாணவியை கடத்திய வழக்கில் அருண்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், சிறுவர் நலக் குழுவிடம் தங்களது மகளைக் கடத்திச் சென்று அருண்குமார் பாலியல் தொல்லை அளித்தகா புகார் அளித்தனர்.
அதன் மீது சிறுவர் நலக்குழு விசாரணை நடத்தியதில், அருண்குமார் மாணவியை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, சிறுவர் நலக்குழு போலீஸில் புகார் அளித்தது.
அதன் பேரில், கிருமாம்பாக்கம் போலீஸார் சிறையில் உள்ள அருண்குமார் மீது மைனர் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக பாக்úஸா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.