புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்புத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை இணைத் தாளாளர் ரெஜிஸ் ஜான் பிரிட்டோ பாராட்டினார்.
நிகழாண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை 264 மாணவர்கள் எழுதினர். இவர்கள் அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் இந்தப் பள்ளி தொடர்ச்சியாக 23 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுத் திகழ்கிறது.
490 மதிப்பெண்களுக்கு மேல் 32 மாணவர்களும், 475 மதிப்பெண்களுக்கு மேல் 125 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 194 மாணவர்களும் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
மேலும், பிரெஞ்சு பாடத்தில் 4 பேர், கணித பாடத்தில் 34 பேர், அறிவியல் பாடத்தில் 16 பேர், சமூக அறிவியல் பாடத்தில் 75 பேர் என மொத்தம் 129 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர் என்றார் பள்ளியின் இணைத் தாளாளர் ரெஜிஸ் ஜான் பிரிட்டோ.