முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழா புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (மே 28) நடைபெறுகிறது.
இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி பிரதேச மகளிர் காங்கிரஸ் சார்பில், இந்திரா காந்தி நூற்றாண்டு விழா கம்பன் கலையரங்கில் ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவர் ஷோபா ஓஸா, பொதுச் செயலர் நக்மா, புதுவை முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், அனைத்துத் பிரிவுத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.